search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகள் தின விழா
    X

    குழந்தைகள் தின விழா

    • அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது.
    • மாணவ, மாணவிகளின் கோலாட்டம் நடந்தது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள சிவபுரிப்பட்டி ஊராட்சி மக்கன்டான் கோவில்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஈஸ்வரி தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் செந்தில் மற்றும் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கோலாட்டம், ராதா ருக்மணி ஆட்டம், தப்பாட்டம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பள்ளி மேலாண்மை குழு தலைவி சுபாஸ்ரீ, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவி ரஞ்சிதா, செல்வம், கோளம்பழனி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை பரிமளா நன்றி கூறினார்.

    Next Story
    ×