search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை
    X

    சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை

    • சிவகங்கையில் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவியர்கள் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

    பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி மாணவ, மாணவியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விகிதாசாரா அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

    விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலாரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டர் தொலைவிற்கு மேலும் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

    விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பா ளாரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

    விடுதிகளில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப்பயில அனுமதிக்கப்படுவார்கள் .

    விடுதி மாணாக்கர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும், மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ ர்களுக்கு கம்பளி, மேலாடையும் வழங்கப்படும்.

    எனவே, மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு கல்வி பயில வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×