search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை
    X

    இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை

    • இடிந்து விழும் நிலையில் உள்ள பிணவறை உள்ளது.
    • விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனையானது தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனை ஆகும். மேலும் சிறந்த மருத்துவமனை என முதல்வரால் பாராட்டப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சை மற்றும் பெண்கள் மகப்பேறு அவசர கால சிகிச்சை செய்து வருகின்றனர்.

    தினமும் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் சேதம் அடைந்து மோசமான சூழ்நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. விபத்துகளில் மரணம் ஏற்படும் நபர்கள் இந்த பிணவறையில்தான் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். மருத்துவர்களே அந்தப் பிணவறைக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

    விரைவில் மாவட்ட நிர்வாகம் முதன்மை வாய்ந்த அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் புதியதாக பிணவறை கட்டிடத்தை ஏற்பாடு செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×