என் மலர்
உள்ளூர் செய்திகள்

வியர்வை அரும்பும் முகத்துடன் காட்சியளித்த சிக்கல் சிங்காரவேலவர்.
வேல்வாங்கும் நிகழ்ச்சியில் சிங்காரவேலவர் முகத்தில் வியர்வை அரும்பும் அற்புத நிகழ்வு
- அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி.
- வியர்வையை சிவாச்சாரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைபக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவில் பிரசித்தி பெற்றது.
அந்த கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த 24ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
முக்கிய திருவிழாவான அம்பாளிடம் முருகன் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சிநடைபெ ற்றது.
இதனை முன்னிட்டு முருகப்பெ ருமான் அலங்கரிக்கப்பட்டு கார்த்திகை மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
மகா தீபாராதனைக்கு பிறகு முருகப்பெருமான் அஜபா நடனத்துடன் கோவிலுக்குள் வலம் வந்தார்.அப்போது அம்பாள் வேல்நெடுங்கண்ணி சன்னதியில் இருந்து சக்திவேலை முருகனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமிக ளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது முருகன் சிலைக்கு முத்து முத்தாக வியர்க்கும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
அப்போது ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலையின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை அரும்பும் ஆன்மீக அற்புதம் நடைபெற்றது.
சிங்காரவேலவரின் முகத்தில் இருந்துஅரும்பிய வியர்வையை சிவாச்சா ரியர்கள் வெண்பட்டால் துடைத்து அதனைஆன்மீக அற்புதத்தின் சாட்சியாக பக்தர்களுக்கு காட்சிப்படுத்தினர்.
கோவிலின் வெளியே காத்திருந்த பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேல் வாங்கும்விழாவின் நிறைவாக இரவு12 மணி அளவில் சிங்காரவே லவருக்கு மகா அபிசேகம் நடைபெற்றது.






