search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி- நகர்மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்
    X

    சிலம்ப போட்டியை தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்த காட்சி.

    தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி- நகர்மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்

    • இப்போட்டியானது 5 வகை பிரிவுகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 20 மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டினர்.

    தென்காசி:

    தென்காசி எம்.கே.வி.கே. பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சிலம்பாட்ட தேர்வு போட்டி நடைபெற்றது இப்போட்டியை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் மேல கரம், புளியரை அரசு மேல்நிலைப்பள்ளி, தெற்கு மேடு அரசு நடுநிலைப்பள்ளி, இலஞ்சி ராமசாமி பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பராபுரம் ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, தென்காசி இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சங்கரன்கோவில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வெள்ளானை கோட்டை குரு பாக்கியம் தொடக்கப்பள்ளி, கட்டளை குடியிருப்பு அரசு நடுநிலைப்பள்ளி, குற்றாலம் பராசக்தி வித்யாலயா, ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி, எம்.கே. வி.கே. மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம் நாடார் கமிட்டி மேல்நிலைப்பள்ளி, செவல்குளம் சென்ட் பால்ஸ் பள்ளி,தென்காசி 7-வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியானது ஒற்றைக்கம்பு , இரட்டைக் கம்பு, பாயிண்ட், குத்து வரிசை ,சிலம்பம் பிரேயர் என்ற 5 வகை பிரிவுகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 20 மதிப்பெண்கள் அடிப்படையில் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி வளாகத்தில் வைத்து சான்றிதழ்கள் வழங்கப்படும் என பயிற்சியாளர் சிலம்பம் பாப்பையா தெரிவித்தார்.

    போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாண வர்கள் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டினர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எம்.கே.வி.கே. பள்ளி முதல்வர் இயேசு பாலன், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலா, வழக்கறிஞர் இசக்கி முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். சிலம்ப ஆசிரியர்கள் கோவிந்த பேரி வனராஜ் பாண்டியன், தெற்கு மேடு மணிகண்டன் வேல்விழி, வெள்ளானை கோட்டை சண்முகப்பிரியா, வடகரைவிக்னேஷ் குமார், திலீப் தேவேந்திரன், துரை , வாசுதேவநல்லூர் மணிகண்டன் ஆகியோர் மாணவர்களை ஒருங்கி ணைத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஆல் இந்தியா சிலம்பம் பிரீமியர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் சிலம்பம் பாப்பையா, பொன்னுத் துரை, தங்கராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×