என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • விக்னேஸ்வர பூஜை, சிறப்பு யாகங்கள், வளர்க்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வடக்கு பூசாரி தெரு நெல்லியடிக்கொல்லை கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத சுப்பிரம ணிய சுவாமி, ஸ்ரீவளவன்ட அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக மங்கல இசை, மகா கணபதி ஹோமம், கணபதி பூஜை புண்ணிய ஹவசனம், பஞ்சகாவியம், லட்சுமி ஹோமம், சுமங்கலி பூஜை, கோமாதா பூஜை, விக்னேஸ்வர, பூஜை, சிறப்பு யாகங்கள், வளர்க்கப்பட்டு சிறப்பாக கும்பாபிஷேக நடைபெற்றது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் பக்த கோடிகள், ஆன்மீக அன்பர்கள், சிவனடி யார்கள், அரசு அதிகாரிகள், ஏராளமான கலந்து கொண்டனர்.

    மேலும் கும்பாபிஷே கத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக மரக்கன்றுகள் வழங்க ப்பட்டது. மேலும் சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு கோவில் நிர்வாக சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை காரியாவிடுதி வடக்கு பூசாரி தெரு நெல்லிய டிக்கொல்லை கிராமவா சிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×