என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடன் தகராறில் கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
    X

    கடன் தகராறில் கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

    • பணத்தை கோவிந்தராஜ் திருப்பி கேட்ட பொழுது தகாத வார்த்தையால் திட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
    • கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஷ்ணு பின்பக்க தலையில் வெட்டியுள்ளார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ரங்கசாமி உடையார் தெரு பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 31). இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (36). கட்டிட மேஸ்திரி.

    கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விஷ்ணு மனைவிக்கு பணம் கொடுத்துள்ளார்.

    இந்த பணத்தை கோவிந்தராஜ் திருப்பி கேட்ட பொழுது தகாத வார்த்தையால் திட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கோவிந்தராஜ் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து விஷ்ணு பின்பக்க தலையில் வெட்டியுள்ளார்.

    அதன் பின்னர் அங்கிரு ந்தவர்கள் காயம்பட்ட விஷ்ணுவை கடத்தூர் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    இது குறித்து அவர் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×