search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்குறிச்சி - கொசவபட்டியில் நாளை மின் தடை
    X

    கோப்பு படம்

    செங்குறிச்சி - கொசவபட்டியில் நாளை மின் தடை

    • மாதந்தோறும் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி செங்குறிச்சி மற்றும் கொசவட்டியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதே போல் கொசவபட்டி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், பஞ்சம்பட்டி, வீரசின்னம்பட்டி, தவசிமடை, விராலிப்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×