என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடம்பத்தூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.75 ஆயிரம் கொள்ளை
- வசந்தகுமார் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பண பரிமாற்றம் செய்யும் கடை வைத்து உள்ளார்.
- பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
கடம்பத்தூர் அருகே உள்ள விடையூர் காரணியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் கடம்பத்தூர் ராஜாஜி சாலையில் பண பரிமாற்றம் செய்யும் கடை வைத்து உள்ளார்.
காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வசந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பணப்பெட்டியில் இருந்த ரூ.75 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து வசந்தகுமார் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






