search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ சங்கத்தினர்
    X

    கோவையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ சங்கத்தினர்

    • அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
    • ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர்.

    கோவை,

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ள பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு விவசாயிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் கோவையில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதராவாக ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதேபோல் அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க எம்பி பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். அவர்கள் பா.ஜ.க எம்.பி. பிரிஜ்பூஷனை கைது செய்ய கோரியும், அவர் பதவி விலக கோரியும் கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×