search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி மெரிலஸ் அப்பர் பஜாரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
    X

    ஊட்டி மெரிலஸ் அப்பர் பஜாரில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

    • கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.
    • நோய் தொற்று பரவும் அபாயம்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி 20-வது வார்டில் மெரிலஸ் அப்பர் பஜார் என்ற பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்படுத்துவதற்கான அங்கு ஒரு சாலையிலும் உள்ளது.

    அந்த சாலையை பயன்படுத்தி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கழிவு நீர் செல்ல முடியாமல் நிரம்பி சாலையில் வழிந்தோடுகிறது. கடந்த சில மாதங்களாக இது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    சாலையில் கழிவு நீர் வழிந்தோடுவதால் அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைகின்றனர். சாலையில் நடந்து செல்ல முடியாமலும் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் அந்த வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலையே காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்து ள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து மக்கள் கூறும்போது, குடியிருப்பு நிறைந்த பகுதியில் சாலையில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் வரவும் வாய்ப்புள்ளது.

    எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கயைாக உள்ளது.

    Next Story
    ×