search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை எதிரொலி: வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிய நெடுஞ்சாலை
    X

    விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    தொடர் விடுமுறை எதிரொலி: வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிய நெடுஞ்சாலை

    • பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • வெறிச்சோடிய நெடுஞ்சாலை

    விழுப்புரம்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. பண்டிகையை கொண்டாட கடந்த 10-ந் தேதி முதல் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்.சாலைகளில் தொடர்ந்து சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி பண்டி கையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாகனங்களில் பொது மக்கள் சென்றனர்.

    தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலான அலுவல கங்கள், தனியார் நிறுவனங்க ளில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது, இதனால் எப்போதும் பரபரப்ாக காணப்படும் விக்கிர வாண்டி டோல்கேட் சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×