search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம்
    X

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு கருப்பு கவுனி கொழுக்கட்டைகள் வழங்கப்பட்டன.

    அரசு பள்ளியில் பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம்

    • நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    தலைமை யாசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.

    மாராச்சேரிஅருண் யாழினி உழவுக்காடு நிறுவனர் வேணு காளிதாசன், பள்ளி மாணவர்களுக்கு கருப்பு கவுனி கொழுக்கட்டைகளை வழங்கி பேசும்போது, தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய அரிசியில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசி வகையிலும் சமைக்கலாம்.

    பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம். சர்க்கரை யளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    தசைகளை வலுவாக்கும்.

    இது போன்ற பல்வேறு பயன்களை கொண்டது பாரம்பரிய அரிசி என்றார்.

    இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, சுந்தர், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.

    Next Story
    ×