என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி அருகே கண்மாயில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் - 2 பேருக்கு வலைவீச்சு
    X

    சிவகிரி அருகே கண்மாயில் மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் - 2 பேருக்கு வலைவீச்சு

    • முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
    • தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி ஊருக்கு மேற்கே உள்ள வழிவழி கண்மாய் பகுதியை மேல்வைப்பாறு வடிநில பிரிவு உதவி பொறியாளர் முப்பிடாதி பார்வையிட சென்றார்.

    அனுமதி இன்றி மண் அள்ளினார்

    அப்போது, கண்மாயில் தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரம் கனகராஜ் (வயது 35) என்பவர் பொக்லைன் எந்திரம் மூலமாக மண் அள்ளி, தேவிபட்டணம் நடுவூர் ராமசாமியாபுரத்தை சேர்ந்த தங்கமலை ( 45) என்பவர் ஓட்டி வந்த டிராக்டரில் கொட்டி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    உதவி பொறியாளர் முப்பிடாதியை கண்டவுடன் டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி விட்டு வாகனத்துடன் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து உதவி பொறியாளர் முப்பிடாதி சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    வழக்குப்பதிவு

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தார். புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி தலைமையில் தனிப்படை அமைத்தார்.

    தப்பி ஓடிய தங்கமலை, கனகராஜ் ஆகியோரையும் பொக்லைன் எந்திரத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×