search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள்

    மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனையிட்டனர்
    • கேட்பாரற்று கிடந்த பேக்கில் அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற ரெயிலை கொடைரோடு ரெயில்நிலையத்தில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு பேக் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அது யாருடையது என பயணிகளிடம் கேட்டபோது யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனைதொடர்ந்து போலீசார் அதனை சோதனை நடத்தினர்.

    அப்போது பல்வேறு வகையான அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து ரெயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×