search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளிக்கு அரிவாள் வெட்டுஅக்காவின் கணவர் கைது
    X

    தொழிலாளிக்கு அரிவாள் வெட்டுஅக்காவின் கணவர் கைது

    • அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    கோத்தகிரி,

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த அசோக் என்பவரின் அக்காவை திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் அந்த பகுதிகளில் சரியான வேலை இல்லாததால் சரவணன் தனது மனைவி மற்றும் மனைவியின் சகோதரர் அசோக் ஆகியோருடன் கோத்தகிரிக்கு வந்தார். இங்கு சரவணனிற்கும், அசோக்கிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சரவணன், அசோக்கிற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரவணன் திடீரென அருகில் இருந்த அரிவாளை எடுத்து அசோக்கை வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அசோக் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே விழுந்தார். பயந்து போன சரவணன் அங்கிருந்து தப்பி சென்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் மனைவி அசோக்கை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

    அப்போது டாக்டர்கள் கோத்தகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் அசோக்கிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

    அப்போது சரவணன் அறவேனு பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்ததை கண்டு உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×