என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் அறிவியல் கண்காட்சி
    X

    பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    • பாரத் கல்வி குழுமங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது. .
    • தூங்கினால் அவர்களை விழிப்புறச்செய்யும் விதமாக ஒரு அறிவியல் படைப்பினை செய்திருந்தார்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சுபேதார் மேட்டில் இயங்கிவரும் பாரத் இன்டர்நேஷனல் செகன்டரி பள்ளியின் பாரத் கல்வி குழுமங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.

    இவ்விழாவில் பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி வரவேற்புரையாற்றினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) முனிநாதன் கலந்து கொண்ட அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் அவர் பேசுகையில் பாரத் கல்வி நிறுவனங்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளில் கடந்த 35-ஆண்டுகளில் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடம் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களாக உருவாகியுள்ளனர்.

    ஆகவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நீங்கள் சிறந்த படைப்பாற்றலுடன் திகழ வேண்டும் என்றும் காட்சிபடுத்தப்பட்ட அறிவியல் படைப்புகள் மற்றும் மாதிரிகளும் சிறப்பாக உள்ளன என்றும் பாராட்டி பேசினார்.

    மேலும் இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் 850-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தப்பட்டது.

    எட்டாம் வகுப்பு மாணவன் பிரதீஷ் வாகன ஓட்டுநர்கள் தூங்கினால் அவர்களை விழிப்புறச்செய்யும் விதமாக ஒரு அறிவியல் படைப்பினை செய்திருந்தார்.

    அப்படைப்பானது அனைவரின் பாராட்டு களையும் பெற்றது. இவ்வி ழாவில் தேர்வு செய்ய ப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு பாரத் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் பரிசு தொகை வழங்கி பேசுகையில் இன்றைய மாணக்கர்களே எதிர்கால ஆராய்சியாளர்கள்.

    இந்த அறிவியல் கண்காட்சியை ஒரு தூண்டு கோளாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலத்தில் மேலும் சிறந்த அறிவியல் படைப்புகளை படைத்திட வேண்டும் என்று கூறினார்.

    இவ்விழாவின் இறுதியில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ் மற்றும் பள்ளியின் துணை செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அறிவியல் கண்காட்சி ற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஹரிநாத் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×