என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கு சென்ற பிளஸ்-1 மாணவி மாயம்
- அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து பாலக் கோடு போலீசில் மாணவியின் தாய் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story






