search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே வேனில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் காயம்
    X

    கோப்பு படம்

    வருசநாடு அருகே வேனில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் காயம்

    • திடீரென வேன் கதவு திறந்ததால் 6-ம்வகுப்பு மாணவன் தவறிவிழுந்து படுகாயமடை ந்தான்.
    • போலீசார் இந்த வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மயிலாடும்பாறையில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்கு சிலர் வேன்களை வைத்துள்ளனர். அதன்படி நேற்று பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் நரியூத்து பகுதியில் உள்ளது.

    அப்போது திடீரென வேன் கதவு திறந்ததால் அதன் அருகே இருந்த அருள்மணி(11) என்ற 6-ம்வகுப்பு மாணவன் தவறிவிழுந்து படுகாயமடை ந்தான். அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குபதிவு செய்து வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் மாணவ-மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்துச்செல்ல பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி தனியாக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் பயன்படுத்த ப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான வாகன ங்களுக்கு முறையான ஆவணங்கள் கிடையாது. மேலும் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் இந்த வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×