search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி சாவு
    X

    விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி சாவு

    • விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி பலியானார்.
    • வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவர் குப்பநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது நெய்வே லியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் மீது மோதிய டாட்டா ஏசி வாகனம் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது, வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கே யே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தகவலின் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் போலீ சார் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தா சலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பித்தனர்.இது குறித்து விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×