search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்
    X

    தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்

    • பாரதிய ஜனதா கட்சி சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு பாஜாக பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கிழக்கு மண்டல பாரதிய ஜனதா கட்சி சார்பில் தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மொரப்பூரில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜாக பட்டியல் அணி மாநில செயலாளர் சாட்சாதிபதி தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் நிபத்தனையின்றி உதவித்தொகை வழங்க வேண்டும். 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்பிரிவு மாவட்ட செயலாளர் விஷ்ணு பிரசாத், மண்டலப் பொதுச் செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ், பிரசார பிரிவு மண்டலத் தலைவர் வடிவேல், மண்டலத் துணைத் தலைவர்கள் வேல்முருகன், சேகர், பட்டியல் அணி மாவட்ட துணைத் தலைவர் கந்தையன், மண்டலச் செயலாளர் சிற்றரசு, சமூக ஊடக பிரிவு மண்டலத் தலைவர் தங்கமணி, பட்டியல் அணி மண்டலத் தலைவர் பிரபு, கனகராஜ், மொரப்பூர் மேற்கு அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் இளைஞரணி மண்டலத் தலைவர் சத்தியப்பிரியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×