search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில்  2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது சுகாதார கழிப்பறை-திறக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது சுகாதார கழிப்பறை,

    சாத்தான்குளத்தில் 2 ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் பொது சுகாதார கழிப்பறை-திறக்க பொதுமக்கள் கோரிக்கை

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார பொது கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் உள்ளது.
    • இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி 14-வது வார்டு தச்சமொழி மீன்கடை தெருவில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் சுகாதார பொது கழிப்பறை மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி திறக்க படாமல் பூட்டி காணப்படுகிறது.

    கழிப்பறை பூட்டி காணப்படுவதால் அப்பகுதி மக்கள் அருகில் உள்ள காலி இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். இதனால் அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கோவில் விழா உள்ளிட்ட திருவிழா காலமாக இருப்பதால் மக்கள் பயன்பாட்டிற்கு மூடி காணப்படும் கழிப்பறையை உடனே திறக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய பா.ஜனதா ஓ.பி.சி. அணி தலைவர் பேராத்துசெல்வம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×