என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சரவணம்பட்டியில் பிளஸ்-2 மாணவர் திடீர் சாவு
- நண்பர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை:
கோவை சரவணம்பட்டி பெரியவீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மனைவி ஜீவா. இவர்களது மகன் விமல்(வயது18).
இவர் காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். விமல் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் விமல் சுற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விமல் வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று விமல் தான் படிக்கும் பள்ளிக்கு அருகில் உள்ள நூலகத்தின் முன்பு அதிக போதையில் படுத்து இருந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் 3 பேர் அங்கு சென்று விமலை எழுந்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுரை கூறினர். ஆனால் அவர் வீட்டுக்கு செல்லாமல் நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தகராறாக மாறியது. அப்போது அவரது நண்பர்கள் விமலை தாக்கி உள்ளனர். இதனால் போதையில் இருந்த விமலுக்கு வலிப்பு ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் பயந்து போய் அங்கிருந்து சென்றனர்.
விமல் வலிப்பால் துடிப்பதைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வி ரைந்து சென்று மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாணவரின் தாயார் ஜீவா அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து மாணவர் விமலை தாக்கிய அவரது நண்பர்களான 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்