search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
    X

    பேராவூரணி போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நடப்பட்டது.

    பேராவூரணி போலீஸ் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா

    • 40 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.
    • தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    நிழல் தரும் மரக்கன்றுகளை இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் வழங்கினார்.

    மரக்கன்றுகளை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் எம்.ராம்குமார், வாகீஸ்வரன் ஆகியோர் நடவு செய்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், தலைமை காவலர் பாலமுருகன், மகளிர் காவலர் சண்முகப்பிரியா, அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன், முன்னாள் கயிறு வாரிய தலைவர் எஸ்.நீலகண்டன், இயற்கை ஆர்வலர் ஆதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இயற்கை ஆர்வலர் கே.எம்.சுந்தரம் சுமார் 40 ஆண்டுகளாக மரக்கன்று களை உற்பத்தி செய்து பொது இடங்களில் நட்டு பராமரித்து வருகிறார்.

    Next Story
    ×