search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்
    X

    எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.


    சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டம்

    • வரலாற்று கண்காட்சி மற்றும் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது.
    • மாநில வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் மக்களாட்சியை பாதுகாப்போம் தேசிய பிரசாரத்தின் ஒரு பகுதியாக வரலாற்று கண்காட்சி மற்றும் மக்கள் சங்கமம் பொதுக்கூட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி நகர தலைவர் சதாம் உசேன் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி ஜின்னா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தகர் அணி பொதுச் செயலாளர் ஜாபர்அலி உஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் சிற்றுரை ஆற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அப்துல் பாசித் மற்றும் ஹக்கீம் சேட், மாவட்ட மக்கள் தொடர்பாளர் செய்யதலி பாதுஷா, டிவிசன் தலைவர் அய்யூப் கான், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேக் முஹம்மது ஒலி, நகர தலைவர் அபு தாஹிர், செயலாளர் சேக் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகர செயலாளர் நிஸார் நன்றி கூறினார்.

    Next Story
    ×