search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
    X

    வேப்பிலைபட்டி அரசு பள்ளியில் கழிவுநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    அரசு பள்ளியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

    • கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.
    • கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் கேத்திரெட்டிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பிலைபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கிராமத்தில் வெளியேறும் சாக்கடை நீர் முழுமையாக பள்ளி முன்பு கடந்த மூன்று மாதங்களாக தேங்கி நிற்கிறது.

    இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாண வியர்கள் சாக்கடை நீரில் நடந்தவாறு சென்று வருகின்றனர்.

    இதனால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சாக்கடை நீர் எளிமையாக செல்ல கால்வாய் அமைத்து சரி செய்யக்கோரி கடந்த 3 மாதங்களாக அதிகாரிகளிடம் கூறியும் எந்த பயனும் இல்லை.

    இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் முன்பு இவற்றை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×