என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஹரித்திரா விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
- பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் உள்ளது
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.
தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஹரித்ரா விநாய கருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வழிபட்டால் கடன் தொல்லை களை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது .
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள் .
Next Story






