என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி கொலை வழக்கில் சேலம் சரக டி.ஐ. ஜி நேரில் விசாரணை
    X

    மூதாட்டி கொலை வழக்கில் சேலம் சரக டி.ஐ. ஜி நேரில் விசாரணை

    • கடத்தூர் அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட இடத்தில் டி.ஐ.ஜி நேரில் விசாரணை நடத்தினார்.
    • அரை பவுன் நகைக்காக கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே அரை சவரன் தோடுக்காக மூதாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கந்தமாள் வயது 72), இவர் இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத நிலையில் நடக்க முடியாமல் வீட்டிலேயே தனியாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கந்தம்மாளின் வீட்டிற்கு அவரது உறவினர் சிவனேஸ்வரன் என்பவர் மூதாட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது கந்தம்மாள் வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்தது.

    இது குறித்து கந்தம்மாளின் சகோதரர் ஆறுமுகத்திற்கு அவர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த கடத்தூர் போலீசார் மூதாட்டி கந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது, இவர் காதில் அணிந்திருந்த அரை சவரன் தங்க நகைக்காக மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கந்தம்மாளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள கடத்தூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஒடசல்பட்டி கூட்ரோட்டில் சம்பவம் நடந்த பகுதியை சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மற்றும் தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் யேசுபாதம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது குறித்த போலீசார் கூறுகையில்; அரை பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்றுள்ளனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவர்கள் என்றனர்.

    Next Story
    ×