search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயங்கி விழுந்து வாலிபர் சாவு
    X

    மயங்கி விழுந்து வாலிபர் சாவு

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி, வேலு நகர் டாஸ்மாக் கடை அருகே நேற்று சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரது அருகே மதுபாட்டில் ஒன்றும் இருந்தது. இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×