search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடத்துடன் தரையில் அமர்ந்து பா.ம.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்
    X

    வாழப்பாடி ஒன்றிய குழு கூட்டத்தில், காலி குடத்துடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா.முருகன்.

    காலி குடத்துடன் தரையில் அமர்ந்து பா.ம.க. கவுன்சிலர் தர்ணா போராட்டம்

    • வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளையம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் துக்கியாம்பாளை யம் கிராமத்தில் பெரும்பா லான குடியிருப்பு பகுதிகளுக்கு சீரான குடிநீர் வழங்கவில்லை என, பா.ம.க ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் இரா. முருகனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த ஒன்றிய குழு உறுப்பினர் முருகன், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்திற்கு காலி குடத்துடன் சென்றார்.

    தர்ணா

    துக்கியாம்பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் வழங்காததை கண்டித்தும், அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி முறையாக குடிநீர் வழங்க கோரியும், வாசகம் எழுதிய பதாகையை கைகளில் பிடித்தவாறு தரையில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஒன்றிய குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒன்றிய குழு தலைவர் சதீஷ்குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்தழகன், அண்ணாதுரை ஆகியோர், துக்கியாம்பாளை யம் கிராமத்தில் ஆய்வு செய்து அனைத்து பகுதி களுக்கும், சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, தர்ணா போராட்ட த்தை ஒன்றிய குழு உறுப்பி னர் உழவன் இரா. முருகன் கைவிட்டு இருக்கையில் அமர்ந்து கூட்டத்தில் பங்கேற்றார்.

    Next Story
    ×