search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் போஸ் மைதானத்தில் பூக்கடைகளை அகற்ற எதிர்ப்பு
    X

    சேலம் போஸ் மைதானத்தில் பூக்கடைகளை அகற்ற எதிர்ப்பு

    • சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது.
    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கடை வீதியில் வ.உ.சி பூ மார்க்கெட் செயல் பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் போஸ் மைதானத்தில் பூ மார்க்கெட் மற்றும் பல்பொருள் அங்காடி, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. வ.உ.சி மார்க்கெட் கட்டு மான பணிகள் முடிவடைந்த தால் விரைவில் பூ மார்க்

    கொட் அங்கு மாற்றப்பட உள்ளது.

    இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி ஈரடுக்கு பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள வணிக வளாகம் அருகே போஸ் மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பூ கடைகளை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    இதன்படி, போஸ் மைதா னத்தில் உள்ள தற்காலிக கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்று வதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபார நல சங்க நிர்வாகி ஆறுமுகம் தலைமையில் வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து கடைகளை அகற்ற அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×