என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 141 பேர் மீது வழக்குபதிவு
- என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
- இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே முன்னாள் பா.ம.க எம்.எல்.ஏ. கார்த்தி, மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் மற்றும் சத்திரிய சேகர், கவிதா தலைமையில் 118 பேர் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சேலம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல் சேலம் இரும்பாலை மாரமங்கலத்துபட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இன்ஸ்பெக்டர் சாரதா கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் லட்சுமணனம் உள்பட 13 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
கரும்பாலை பஸ் நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் செய்ததாக கோட்டகவுண்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட 10 பேர் மீது கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்