search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டுகூடுதலாக 150 சிறப்பு பஸ்கள்
    X

    சேலம் கோட்டத்தில் முகூர்த்த தினத்தை முன்னிட்டுகூடுதலாக 150 சிறப்பு பஸ்கள்

    • சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் திருமண முகூர்த்தத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை 150 சிறப்பு பஸ்கள் கூடுதல் நடைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் சேலத்தில் இருந்து கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    பாதுகாப்பான பயணம்

    எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்திடும்படி போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×