search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6மணி நேரம் தாமதமாக வந்த லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ்
    X

    6மணி நேரம் தாமதமாக வந்த லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ்

    • கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக மும்பைக்கு லோக்மான்ய திலக்குக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • இந்த ரெயில் வர தாமதம் ஏற்பட்டதால் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.

    கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக மும்பைக்கு லோக்மான்ய திலக்குக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவையில் காலை 8.50 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வர தாமதம் ஏற்பட்டதால் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்தது.ஆனால் அறிவிப்பு தாமதமாக வெளியிட்டதால்இந்த தகவல் பயணிகளை சென்றடையவில்லை. இதனால்மதியம் 2.45 மணிக்கு புறப்பட்ட ரெயலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் , தருமபுரி ஸ்டேசன்களில் ஏராளமான பயணிகள் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ேமலும் முன் கூட்டியே இனி வரும் நாட்களில் கால தாமதம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×