என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சள் பட்டாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன்.
வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு
- வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
- ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதி அம்மன் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சர்வ அபிஷேக, ஆராதனைகள், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணபகவான் மரசிற்ப சாமிகளுக்கும், வன்னிமரத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அக்ரஹாரம் அம்மன் அன்னதானம் குழுவினரால் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில்களிலும் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.






