என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூறைக்காற்றுடன் கன மழை சேலம் கோர்ட்டில் மின் கம்பங்கள் உடைந்தன
    X

    சூறைக்காற்றுடன் கன மழை சேலம் கோர்ட்டில் மின் கம்பங்கள் உடைந்தன

    • சேலம் மாநகர பகுதி களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதி கரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சீதோசண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.
    • மேலும் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    சேலம்:

    சேலம் மாநகர பகுதி களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதி கரித்தது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென சீதோசண நிலையில் மாற்றம் ஏற்பட்டு சூறை க்கா ற்றுடன் கனமழை பெய்தது.

    குறிப்பாக கன்னங்குறிச்சி, மணக்காடு, மூக்கனேரி, அழகாபுரம், அஸ்தம்பட்டி, பெரமனூர் உட்பட பல பகுதிகளில் சூறைக்காற்று டன் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

    சேலம் காந்தி மைதா னத்தில் பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதே போல சேலம் கோர்ட்டில் 4 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

    இதனால் அஸ்தம்பட்டி பகுதியில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலை களில் ஓடிய தால் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலைகளில் விழுந்த மரங்களை மாநக ராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று வெட்டி அப்புறப்ப டுத்தினர். சேலம் புறநகர் மாவட்டத் தில் வீரகனூர், ஆனை மடுவு உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. வயல்வெ ளிகளிலும் தண்ணீர் தேங்கிய தால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக வீரகனூரில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. சேலம் 9.7, ஆனை மடுவு 9 என மாவட்டம் முழுவதும் 45.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    நேற்று மழையை தொடர்ந்து மாவட்டம் முழு வதும் குளிர்ந்த சீதோசண நிலை நிலவினாலும், இன்று காலையில் இருந்து வெயி லின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

    Next Story
    ×