search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் பெண் மாயம்
    X

    மாயமான பத்மாவதி

    சேலத்தில் பெண் மாயம்

    • கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர்.
    • கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் திருவாக் கவுண்டனூர் வசந்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் - மணி மேகலை. இவர்களது மகள் பத்மாவதி (வயது 38). இவரை பொம்மிடியில் திருமணம் செய்து கொடுத்தனர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் பத்மாவதிக்கு 7 வருடம் முன்பு மனநிலை பாதிக்கப்பட்டது. இதற்காக தாய் மணிமேகலை வீட்டில் இருந்து பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற பத்மாவதி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் பத்மாவதி கிடைக்கவில்லை.

    புகார்

    இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் தாய் மணிமேகலை புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மாவதியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×