search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாரமங்கலம் வார சந்தையை நவீனமாக்க நிதி ஒதுக்கீடு
    X

    தாரமங்கலம் வார சந்தையை நவீனமாக்க நிதி ஒதுக்கீடு

    • நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது.
    • இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறி, ஆடு, கோழி ஆகியவற்றி வாங்கியும் விற்றும் வருகின்றனர். இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேற்கூறையுடன் கூடிய 156 கடைகள், வணிகப் பயன்பாட்டிற்கான கான்கிரீட் தளங்களைக் கொண்ட 14 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், நவீன கழிப்பிட வளாகங்கள், 4 புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய 12,350 சதுர அடி பரப்பளவில் வார சந்தை புனரமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் தனம், நகராட்சி பொறியாளர் பிரேமாஇ நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தை வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை அகற்றாமல் பணியை தொடங்குவது என்றும், மழைநீர், கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கவும், வணிக நிறுவன பயன்பாட்டிற்கு கூடுதலான கடைகளை கட்டுவது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

    Next Story
    ×