search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் அம்மாபேட்டையில் வீடு புகுந்து பணம், செல்போனை திருடியவர் கைது
    X

    சேலம் அம்மாபேட்டையில் வீடு புகுந்து பணம், செல்போனை திருடியவர் கைது

    • அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
    • நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (47). இவர் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். நேற்றிரவு மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்த ரூ.5,200 பணம் மற்றும் செல்போனையும் எடுத்துக்கொண்டு வெளியே வர முயன்றார். அப்போது கையும் களவுமாக அவரை மடக்கி பிடித்த அன்பழகன் அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் அப்ரித் என்பது தெரியவந்தது. இவர் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×