search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் இரும்பாலை அருேக எலக்ட்ரீசியன்  தற்கொலை
    X

    சேலம் இரும்பாலை அருேக எலக்ட்ரீசியன் தற்கொலை

    • ஸ்ரீரங்கன். இவரது மகன் குமாரவேல் (33), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஆண்டு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்தார்.
    • மனம் உடைந்த குமாரவேல் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள கீரபாப்பம்பாடி மலையனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் குமாரவேல் (33), எலக்ட்ரீசியன். இவர் கடந்த ஆண்டு வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி கீேழ விழுந்தார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் மனம் உடைந்த குமாரவேல் நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். பி ன்னர் சம்பவம் குறித்து இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த குமாரவேலுக்கு திருமணம் ஆகவில்லை.

    Next Story
    ×