என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆத்தூர் அருகே இளம்பெண் மாயம்
    X

    ஆத்தூர் அருகே இளம்பெண் மாயம்

      சேலம்:

      சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டு கொட்டாய் நேருநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் வயது (28), தொழிலாளி. இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கொளஞ்சியப்பன் மகள் அகிலா (22) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .

      இந்தநிலையில் மதியழகன் கடந்த 2-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்த அகிலா உறவினர்களிடம் ஆத்தூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் அதன்பின்னர் இது வரை வீடு திரும்பவில்லை . இதையடுத்து உறவினர்கள் அக்கம் பக்கத்ததில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் மதியழகன் ஆத்தூர் புறநகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மாயமான அகிலாவை தேடி வருகிறார்கள்.

      Next Story
      ×