search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய சூரமங்கலம் அருகே மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு
    X

    பழைய சூரமங்கலம் அருகே மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு

    • ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார்.
    • கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார்.

    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளம் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வெள்ளிப்பட்டறை வைத்து நடத்தி வரும் இவருக்கு தங்கம்மாள் (வயது 72) என்ற மனைவி உள்ளார். இன்று காலை 10.30 மணி அளவில் தங்கம்மாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களில் ஒருவர் தங்கம்மாளிடம் விலாசம் கேட்பது போல் பேசியவாறூ அவரது கழுத்தில் இருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கம்மாள் கூச்சலிட்டார்.

    இவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்ற வாலிபரை விரட்டி சென்றனர். ஆனால் அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இதுகுறித்து தங்கம்மாள் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளை யர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×