search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மத்திய சிறையில்  ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
    X

    சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு

    • கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • இந்நிலையில் நேற்று தேவராஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 61). இவல் கடந்த 2002-ம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக கன்னங்குறிச்சி போலீசார் தேவராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் கடந்த 2006-ம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து சேலம் சிறையில் தேவராஜ் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் நேற்று தேவராஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சிறை காவலர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியிலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட்டு மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×