என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் பெட்ரோல் பங்கில் ரூ.50 ஆயிரம் திருட்டு
- வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது ஊழியர்களுக்கு தெரியவந்தது.
- அடையாளம் தெரியாத நபர் பணத்தை திருடிச் செல்வதும் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சியில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் இந்த பங்கில் வசூலான பணத்தை ஊழியர்கள் சரி பார்த்தனர். அப்போது வசூல் தொகையில் ரூ. 50 ஆயிரம் மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வருவதும், பின்னர் பெட்ரோல் பங்கில் உள்ள பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக பெட்ரோல் பங்க் மேலாளர் ஆறுமுகம் (வயது53) என்பவர் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story






