search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.1 லட்சம்  கொள்ளை
    X

    பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.

    வள்ளியூரில் பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை

    • நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் பிரேமா தளவாய்புரம் டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறார்.
    • இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆன்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந் தேதி நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் கனகராஜ் (வயது 56).

    ஆசிரியை

    இவர் நெல்லை அரசு போக்குவரத்து பணி மனையில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா தளவாய்புரம் டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளி ஆசிரி யையாக பணியாற்றுகிறார்.

    இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆன்ட்ரூஸ் கனகராஜ் தனது குடும்பத்தினருடன் கடந்த 25-ந் தேதி நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    கொள்ளை

    பின்னர் நேற்று இரவு தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.அப்போது வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ஆண்ட்ரூஸ் கனகராஜ் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமை யிலான தனிப்படையினர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், சிதம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அதில் அருகில் உள்ள வீட்டின் கண்காணிப்பு காமிராவில் மர்ம நபர்கள் வெள்ளை அடித்து விட்டு, மாடி வழியாக வீட்டின் உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்

    Next Story
    ×