search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் ரூ.33½ கோடியில் தெரு விளக்குகள்
    X

    தெரு விளக்குகள்

    பெண்களின் பாதுகாப்பிற்காக சென்னையில் ரூ.33½ கோடியில் தெரு விளக்குகள்

    • சென்னையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களில் ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் விடுபட்ட இடங்களில் 1,104 மின்சேமிப்பு எல்.இ.டி. விளக்குகள்.
    • 36 உயர்கோபுர எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சென்னை:

    பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னையில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மண்டலங்களில் ரூ.4 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் விடுபட்ட இடங்களில் 1,104 மின்சேமிப்பு எல்.இ.டி. விளக்குகள், போலீஸ் சார்பில் பாதுகாப்பு கருதி அறிவுறுத்தப்பட்ட இடங்களில் ரூ.6.01 கோடி மதிப்பீட்டில் 696 எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் 49 உயர்கோபுர எல்.இ.டி. மின்விளக்குகள், மின்துறை மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் பாதுகாப்பு கருதி ரூ.22 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரத்து 794 மின்சேமிப்பு எல்.இ.டி. தெருவிளக்குகள் மற்றும் 36 உயர்கோபுர எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணிகள் உள்பட ரூ.33 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×