என் மலர்
உள்ளூர் செய்திகள்

மளிகை கடையில் ஷட்டரை உடைத்து ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை
- பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
- மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடையை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது42). இவர் போச்சம் பள்ளி பேருந்து நிலைய வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் முத்துவேல் இன்றுகாலை கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் ஷட்டர் கடப்பாரையால் நெம்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடையை உடைத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை யர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






