என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே கோழிகடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு
- தேன்கனிக்கோட்டை அருகே கோழிகடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
- உறவினர் ஒருவர் விபத்தில் காயமமைடந்ததால் அவரை பார்க்க சென்றபோது கோழிக்கடையின் உரிமையாளர் வீட்டிற்குள் புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடியுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே சாகர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் சதர். இவரது மகன் ஜகீர் (வயது39). இவர் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாமியா பானு.
இந்த நிலையில் ஷாமியா பானு, தனது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை பார்ப்பதற்காக ஷாமி யாபானுவும், அவரது கணவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு ஓசூர் சென்றனர். மீண்டும் அவர்கள் நேற்று வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் இருந்த ரூ.2 லட்சம் திருடு போனது தெரியவந்தது.
விசாரணை
இதுகுறித்து ஜாகீர் உசேன் தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






