என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.1லட்சம்-நகை திருட்டு
    X

    மோட்டார் சைக்கிளில் விவசாயி வைத்திருந்த ரூ.1லட்சம்-நகை திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறிது நேரம் கழித்து முனியப்பன் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • வண்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சமும், ஒரு பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சின்னப்பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது37). விவசாயியான இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகையை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்தையும், ஒரு பவுன் நகையையும் தான் வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டின் அடியில் வைத்து எடுத்து வந்தார்.

    பின்னர் அவர் பழைய தபால் நிலையம் அருகே உள்ள ஒரு பிரிண்டிங் கடைக்கு செல்வதற்காக வண்டியை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து முனியப்பன் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது, கடையின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடிபார்த்தபோது, சிறிதுதூர தொலைவில் வண்டியின் சீட்டு பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வண்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சமும், ஒரு பவுன் நகையையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து முனியப்பன் பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் முதற்கட்ட விசாரணை செய்ததில், முனியப்பன் நகையை அடமானம் வைத்து பணத்தை வாங்கி வந்ததையும், வண்டியை ஒரு கடையின் முன்பு நிறுத்தியிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வண்டியை சிறிது தூரம் எடுத்து சென்று அதில் இருந்த பணத்தையும், நகையையும் திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×