search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில்   நகையை மீட்க சென்ற தம்பதியரிடம் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
    X

    பணத்தை பறிகொடுத்த தம்பதியிடம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ரகுபதி விசாரணை நடத்திய போது எடுத்தபடம்.

    சிதம்பரத்தில் நகையை மீட்க சென்ற தம்பதியரிடம் இருந்து ரூ.3 லட்சம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை

    • சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர்.
    • அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்..

    கடலூர்:

    சிதம்பரத்தை அடுத்த கண்டியாமேடு கிராமத்தில் வசிப்பவர்கள் அறிவுக்கண்ணன் லதா தம்பதியர். இவர்கள் தங்கள் குடும்ப செலவிற்காக சிதம்பரம் தெற்கு வீதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியில் நகையை அடமானம் வைத்தனர். இந்நிலையில் அடமானம் வைத்த நகையை மீட்க ரூ.3 லட்சம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சில்லரை பணத்தை எடுத்து வீசினர். இதனை எடுத்து அவர்களிடம் ஓப்படைக்க அறிவுக்கண்ணன், லதா தம்பதியர் முயற்சித்தனர்.

    அப்போது அந்த மர்ம நபர்கள் அறிவுக்கண்ணன் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி அறிவுக்கண்ணன், லதா தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×